2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வாழைக்குலை வெட்டியவருக்கு சரீர பிணை

Kogilavani   / 2014 ஜனவரி 24 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.புத்தூர் எல்லாளன் நூலகத்திற்கு அருகிலுள்ள வாழைத்தோட்டத்தில் வாழைகுலைகளை திருட முற்பட்ட ஆவரங்கால் மேற்கைச் சேர்ந்த இராசரத்தினம் திலீபன் (வயது -23) என்பவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்வதற்கு யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் பஷீர்  மொஹமட் வியாழக்கிழமை (23) உத்தரவிட்டார்.

மேற்படி பகுதியில், வாழைக்குலைகளை வெட்டிக்கொண்டிருந்த நபரை அவதானித்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்ததுடன், இது தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாருக்கு முறையிட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த நபரை  கைதுசெய்து, வியாழக்கிழமை (23) மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .