2025 ஜூன் 26, வியாழக்கிழமை

'சமூக மட்ட அமைப்புக்கள் வலுவான அமைப்பாக இருக்க வேண்டும்'

Kogilavani   / 2014 ஜனவரி 24 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


'சமூக மட்ட அமைப்புக்கள் ஒரு வலுவான அமைப்பாக இருக்க வேண்டும்' என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கிளிநொச்சியில் எக்டட் நிறுவனத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள சமூக மட்ட அமைப்புக்களுக்கான ஒருங்கிணைந்த உள்ளக வலுவூட்டல் நிலையத்தின் தொடக்க விழா இன்று வெள்ளிக்கிழமை (24) கிளிநொச்சியில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்களில் ஒவ்வொரு மட்ட அமைப்புக்களும் முன்னிலை வகிக்கவேண்டும்.

சமூக மட்ட அமைப்புக்களில் பிரதிநிதிகளாக இருப்பவர்களுக்கு தங்களுக்கு கிடைக்கின்ற சமூகம் சார்ந்த செய்திகளை அந்தந்த கிராமங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது.

அதேபோன்று ஒவ்வொரு கிராமங்களின் செயற்பாடுகளையும் சமூக அமைப்புக்கள் மிகவும் வலுவுடையதாக வளர்த்தெடுக்க வேண்டும்.
அதனால் இதுபோன்ற வள நிலையங்களின் ஊடாக நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம்' எனவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் எக்டட்  நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் அன்ரூசற்ரி, சமூக மட்ட அமைப்புக்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .