2025 ஜூன் 26, வியாழக்கிழமை

விபத்தில் வயோதிபர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 26 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். சுன்னாகம் றொட்டியாலடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த இளையதம்பி தவராசா (வயது 65) என்பவர் படுகாயமடைந்த நிலையில், தெல்லிப்பழை  ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இவர் வீதியைக் கடக்க முற்பட்டபோது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டுச்  சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவரை இராணுவத்தினர் தமது வாகனத்தில் ஏற்றிச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .