2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கூனன்காட்டில் இந்து மயானம் மீள அமைப்பு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 28 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


வலி.கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட வளலாய் கூனன்காட்டுப் பிரதேசத்தின் இந்து மயானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் பன்முகப்படுத்தப்பட்ட 1½ இலட்சம் ரூபா நிதியில் புனரமைப்புச் செய்யப்பட்டு பிரதேச சபையிடம் நேற்று (27) கையளிக்கப்பட்டுள்ளது.

ஜே.284 கிராம அலுவலர் பிரிவினைச் சேர்ந்த வளலாய் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதி இந்த மயானம் காணப்படுகின்றது. கடந்த 23 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த பிரதேசம் அண்மையில் விடுவிக்கப்பட்டதில் இந்த இந்து மயானமும் விடுவிக்கப்பட்டது.

எனினும் இதனைத் பாவிக்க முடியாத நிலையில் இருந்தமையினால் சுரேஸ் பிரேமச்சந்திரனின் 2013ஆம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இந்த இந்து மயானம் மீண்டும் புனரமைக்கப்பட்டது.

தற்போது இந்த இந்து மயானத்தினை பராமரித்து நடத்தும் பொறுப்பு வலி.கிழக்குப் பிரதேச சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .