2025 ஜூன் 26, வியாழக்கிழமை

குழந்தைகளை கிணற்றில் போட முயன்ற தாய்க்கு தொடர் விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 28 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். பண்டத்தரிப்பு பனிக்குளம் பகுதியில் தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றிற்குள் போட முனைந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ். பெண்கள் சிறுவர் நீதிமன்ற நீதிபதி கே.ஐPவராணி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (28) உத்தரவிட்டார்.

மேற்படி இடத்தினைச் சேர்ந்த பூபாலசிங்கம் தனுசியா (25) என்ற மேற்படி பெண் கடந்த 20ஆம் திகதி தனது இரண்டு குழந்தைகளையும் அடித்து துன்புறுத்திவிட்டு கிணற்றில் போடுவதற்கு முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த அயலவர்கள் அதனைத் தடுத்து நிறுத்தியதுடன், குறித்த பெண் தொடர்பான விடயத்தினை கிராம அலுவலரின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து அவர் இது குறித்து இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டார்.

பொலிஸார் மேற்படி பெண்ணினை கடந்த செவ்வாய்க்கிழமை (21) கைது செய்து அன்றைய தினமே மல்லாகம் சிறுவர் மற்றும் பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

அதன்போது நீதவான் குறித்த பெண்ணை இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அத்துடன், அந்தப் பெண்ணின் 3 வயதுப் பெண் குழந்தையினை கைதடியிலுள்ள அரச சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்குமாறும், மற்றைய 1½ வயது ஆண் குழந்தையினை பாட்டியின் சம்மதத்துடன் அவர் வைத்துப் பராமரிக்கவும் நீதவான் அனுமதி வழங்கினார்.

இந்நிலையில் மேற்படி வழக்கு இன்று (28) மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொண்ட போது, மேற்படி பெண்ணை சிறைச்சாலை அதிகாரிகளின் உதவியுடன் மனநல சிகிச்சைக்கு உட்படுத்துமாறும், அத்துடன் அவரை எதிர்வரும் பெப்ரவரி 11ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .