2025 ஜூன் 26, வியாழக்கிழமை

யாழ். கூட்டுறவு சங்கத்தில் திருட்டு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 28 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். கோப்பாய் மத்தியிலுள்ள கூட்டுறவு சங்க நிலையமொன்றில் 45,000 ரூபா பெறுமதியான பொருட்கள் நேற்றிரவு (27) திருடப்பட்டுள்ளதாக கூட்டுறவுச் சங்கத்தின் முகாமையாளர் சிவபாலன் சிவலிங்கத்தினால் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி தெரிவித்தார்.

குறித்த நிலையத்தின் பின்கதவை உடைத்து உள்நுழைந்த திருடர்கள், அங்கிருந்த பால்மாக்கள், சவர்க்காரங்கள், டின் மீன்கள் மற்றும் குளிர்பானங்கள்  உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருட்டுப்போயுள்ளதாக முறைப்பாட்டில் முகாமையாளர் கூறினார் என தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .