2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வீட்டில் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். சித்தங்கேணி - கீரிமலை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து 50,000 ரூபா பெறுமதியான பொருட்கள்  திருடப்பட்டுள்ளதென்று  வீட்டின் உரிமையாளரான பொன்ராசா இரத்தினசிங்கம்  நேற்று சனிக்கிழமை இரவு முறைப்பாடு செய்ததாக யாழ். வட்டுக்கோட்டை பொலிஸார்  தெரிவித்தனர்.

மேற்படி வீட்டிலுள்ளவர்கள் உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பியபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு ஆடைகள், தொலைக்காட்சிப்பெட்டி, 5,000 ரூபா பணம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதென்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .