2025 ஜூன் 26, வியாழக்கிழமை

துர்க்காதேவி மகளிர் குடியேற்றத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டல்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -எஸ்.குகன்


யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் 'துர்க்காதேவி மகளிர் குடியேற்றத் திட்டம்' என்ற பெயரில் தெல்லிப்பழையில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) அடிக்கல் நாட்டப்பட்டது.

மேற்படி துர்க்காபுரம் மகளிர்; இல்லத்தில் தங்கியிருந்து திருமணமான 10 பெண்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் நிதியிலிருந்து தலா 500,000  ரூபா பெறுமதியில் வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

இதற்காக தெல்லிப்பழையைச் சேர்ந்த பொன்னையா குடும்பத்தினர் 7 ½ பரப்புக் காணியை அன்பளிப்புச் செய்துள்ளனர்.

துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் அடிக்கல்லை நாட்டிவைத்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .