2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வியாபார நிலையத்தில் கொள்ளை

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 05 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். கொக்குவில் புகையிரத வீதிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் 75,000 ரூபா பெறுமதியான  பொருட்கள் நேற்றிரவு (04) கொள்ளையிடப்பட்டுள்ளதாக அவ்வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான கே.இரத்தினம், கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடையின் முன் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த அத்தியாவசியப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக குறித்த பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜயக்கொடி தெரிவித்தார்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .