2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தொலைத்தொடர்பு நிலையத்தில் திருட்டு

Super User   / 2014 பெப்ரவரி 05 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். பரமேஸ்வர வீதியிலுள்ள தொலைத்தொடர்பு நிலையத்தில் 150,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளது என யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி டபிள்யூ.எ.எல்.விக்கிரமரராட்சி இன்று தெரிவித்தார்.

இது தொடர்பில் நிலையத்தின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உரிமையாளர் இன்று அதிகாலை நிலையத்திற்கு சென்றபோது, நிலையத்தின் முன்கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த கைத்தொலைப்பேசிகள், மடிக்கணினி, பாடல் ஒலிபரப்பும் பெட்டி உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்டட்டுள்ளன என உரிமையாளர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .