2025 ஜூன் 26, வியாழக்கிழமை

குருநகர் படகுத் துறைமுகத்தை மீளப்புனரமைப்பது தொடர்பில் ஆராய்வு

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 07 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பாணம், குருநகரிலுள்ள படகு கட்டும் துறைமுகத்தை மீள் புனரமைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார். 

குருநகர் பகுதிக்கு இன்றைய தினம் விஜயம் செய்த அமைச்சர், குறித்த விடயம் தொடர்பாக நேரில் சென்று ஆராய்ந்தார்.

இதன்போது குறித்த பகுதியில் படகு கட்டும் துறைமுகத்தை மீள்புனரமைப்பு செய்வதன் ஊடாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் அடையக் கூடிய நன்மைகள் தொடர்பில் அமைச்சர் துறைசார்ந்தோரிடம் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன், மீள்புனரமைப்பின் போதும் துறைமுகம் ஆழப்படுத்தப்படும் பட்சத்திலும் அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்ட அதேவேளை, இவ்விடயம் தொடர்பில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் குருநகர் கடற்பகுதியில் தடைசெய்யப்பட்ட சுருக்குவலை மற்றும் டைனமைற் வெடிவீசி தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதால் தமது தொழிற்துறை நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்படுவதாகவும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்ட போது குறித்த விடயம் தொடர்பில் தாம் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது அமைச்சரின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி குகேந்திரன், ஈ.பி.டி.பியின் யாழ்.நகர இணைப்பாளரும், யாழ். மாநகர சபை உறுப்பினருமான துரைராசா இளங்கோ (றீகன்) உள்ளிட்டோர் உடனிருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .