2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இணைந்த சுகாதார விஞ்ஞானபீட மாணவர்கள் போராட்டம்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, சொர்ணகுமார் சொரூபன்

இலங்கையிலுள்ள இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் கையெழுத்து வேட்டைப் போராட்டமொன்று இன்று (09) யாழ். பேரூந்து நிலையத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.

நான்கு வருட இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைநெறி 3101 வருடமாகக் குறைக்கப்பட்டதற்கு எதிராகவும் சகல இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களுக்கும் நான்கு வருட பட்டப்படிப்பை உறுதி செய்யுமாறு கோரி இலங்கையிலுள்ள அனைத்து இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் இந்தக் கையெழுத்துப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இலங்கையிலுள்ள 11 மாவட்டங்களில் இந்தக் கையெழுத்துப் போராட்டம் இன்று (09) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இயன் மருத்துவம், ஊடுகதிர்படமெடுப்பு, மருந்தாக்கவியல், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், தாதியல் ஆகிய பட்டப்படிப்புக்கள் 2005ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆண்டு வரை நான்கு வருடங்களைக் கொண்ட பட்டப்படிப்புக்களாக இருந்தன.

எனினும் 2010ஆம் ஆண்டு இவை 3101ஆக மாற்றப்பட்டன. அதாவது 3 வருடங்கள் சாதாரண பட்டத்தினையும் அதன் பின்னர் ஜி.பி.ஏ 2.8 ஐ விட அதிகமாக எடுக்கும் மாணவர்கள் மேலும் ஒரு வருட விசேட பட்டப்படிப்பையும் மேற்கொள்ளக்கூடியதாக மாற்றப்பட்டது.

இந்த மாற்றத்தினை எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே இந்தப் கையெழுத்திடும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு எதிரான போராட்டங்கள் கடந்த காலங்களிலும் பல்வேறு தரப்பினர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரப்பட்டதாக போராட்டத்தில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .