2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கோயில் பணம் கொள்ளை; இளைஞன் கைது

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்புப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணி கொத்துக்குளத்து மாரியம்மன் கோயிலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பணம் திருட்டுச் சம்பவம் தொடர்பில்இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது சம்பவம் நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். மேற்படி ஆலயத்தின் பணத்தட்டில் வைக்கப்பட்டிருந்த 157,050 பணம் திருடுப் போய்விட்டதாக மட்டக்களப்புப் பொலிஸில் முறையிடப்பட்டதற்கமைய மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மேற்படி இளைஞனை இன்று புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .