2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சங்கிலி திருடிய பெண் சரீர பிணையில் விடுதலை

Kogilavani   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியிலுள்ள வீடொன்றில் 2 ½ பவுண் சங்கிலி திருடிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண்ணை 90,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கவும், அத்துடன் குறித்த பெண்ணை திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை சென்று கையொப்பமிடவேண்டும் எனவும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாகப்தீன் இன்று (19) உத்தரவிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

'கிளிநொச்சி நகருக்கு அண்மையிலுள்ள வீட்டிலிருந்த சிறுமி ஒருவருக்கு தாயார் அணிவித்த சங்கிலியினை குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை (15) கழற்றி மேசையில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் மேற்படி வீட்டுக்காரருக்கு தெரிந்த திருகோணமலையினைச் சேர்ந்த பெண்ணொருவர் குறித்த வீட்டிற்கு வந்திருந்தார். அவர் மேசையிலிருந்த சங்கிலியினை திருடி அதனை தனது உள்ளாடைக்குள் வைத்துள்ளார்.

தொடர்ந்து வீட்டுக்காரர் மேசையின் மேலே இருந்த சங்கிலியினைத் தேடியபோது அது அங்கு காணப்படாமையால் வீட்டு உரிமையாளரால் உடனடியாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அந்த முறைப்பாட்டில் வீட்டிற்கு வந்த பெண் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய உடனடியாக பொலிஸார் குறித்த பெண்ணை சோதனை செய்தபோது, அவரிடமிருந்து தங்கச் சங்கிலி மீட்கப்பட்டது.

தொடர்ந்து மேற்படி பெண் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, பதில் நீதவான் குறித்த பெண்ணை இன்று (19) வரை விளக்கமறியலில் வைக்கவும், அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தவும் உத்தரவிட்டார்.

அடையாள அணி வகுப்பில் குறித்த பெண் அடையாளம் காட்டப்பட்டதினைத் தொடர்ந்து மேற்படி வழக்கு இன்று (19) நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .