2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

முல்லையில் 'நட்பு நிலையம்' திறப்பு

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கெயார் சர்வதேச நிறுவனத்தினால் 4 இலட்சம் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட 'நட்பு நிலையம்' இன்று (24) திங்கட்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் திட்டமிடல் அதிகாரி வைத்திய கலாநிதி து.ஜெயகுலராஜா இந்தக் கட்டிடத்தினைத் திறந்து வைத்தார்.

பால்நிலை வன்முறைகளால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்பான விடயங்களை கையாளவும், அவர்களுக்கு பொருத்தமான புனர்வாழ்வு செயற்றிட்டங்களை வடிவமைக்கவும் இந்த நட்பு நிலையம் செயற்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இந்த நிலையத்திற்கான பொறுப்பதிகாரியாக வைத்தியர் சி.விதுரன் கடமையாற்றுவார் என பதில் வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கெயார் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ம.பிரபாகரன், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.சுரேஸ்குமார், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் சி.குணபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .