2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஆடு திருடர்கள் மீது தாக்குதல்: இருவர் காயம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 25 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.வட்டுக்கோட்டை மூளாய் பகுதியிலுள்ள வீடொன்றில் ஆடுகளை திருடச் சென்ற தந்தை மற்றும் மகனை அப்பகுதி மக்கள் திங்கட்கிழமை (24) இரவு மடக்கிப்பிடித்துள்ளதுடன்  அவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் இருவரும் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் மூளாய் தெற்கு சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த எஸ்.துலராஜா (68), துலராஜா செல்வநிதி (31) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .