2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தேசிய மட்ட விவாத போட்டியில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை

Kogilavani   / 2014 மார்ச் 03 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


கொழும்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) தேசிய மட்ட விவாதப் போட்டியில் யாழ்.மாவட்டம் சார்பாக வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி பங்குபற்றவுள்ளது.

யாழ்.மாவட்ட பாடசாலைகளின் மாணவ விவாதக் குழுக்களுக்கிடையிலான மொழி முனை 2014 விவாதப்போட்டியில் முதலிடத்தை பெற்றுகொண்ட நிலையிலேயே வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை தேசிய மட்ட போட்டியில் பங்குபெறவுள்ளது.

மேற்படி விவாதப் போட்டி இலங்கை தமிழ் விவாதிகள் கழகத்தின் ஏற்பாட்டில், இளைஞர் இலக்கிய மன்றத்தின் அனுசரனையுடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது.

இதில், சுண்டுக்குழி மகளிர் கல்லூரி, சென்.ஜோன்ஸ் கல்லூரி, வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, திருக்குடும்பக் கன்னியர்மட பாடசாலை, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, வட்டு இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென்.பற்றிக்ஸ் கல்லூரி, அச்சுவேலி புனித திரேசா மகளிர் உயர்தரப் பாடசாலை, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம், இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் விவாத குழுக்கள் பங்குபற்றியிருந்தன.

தொடர்ந்து இறுதிப்போட்டியில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை விவாதக்குழுவும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி விவாதக் குழுவும் விவாதம் செய்தன.

இதில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டது. இரண்டாமிடத்தினை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியும், மூன்றாமிடத்தினை பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையும் பெற்றுக்கொண்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .