2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

யாழிலிருந்து தூரசேவைகளுக்கான பேரூந்துகள் உரிமையாளர் சங்கத்தின் கட்டிடம் திறப்பு

A.P.Mathan   / 2014 மார்ச் 03 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். தனியார் தூரசேவை பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் அலுவலகம் இன்று (03) காலை யாழ். ஸ்டான்லி வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் அலுவலகக் கட்டிடத்தினை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

தூரஇடங்களுக்கான சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் உரிமையாளர்கள் சங்கமொன்று இல்லாமல் கடந்த காலங்களில் சேவையில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து அவர்களுக்கான சங்கம் தற்போது உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தூரசேவைப் பேரூந்து உரிமையாளர்கள் பிரச்சினைகளை இலகுவில் தீர்த்துக்கொள்ள முடியும் என்ற நோக்குடன் இந்த அலுவலகக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். தனியார் தூரசேவைப் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரா.கெங்காதரன், செயலாளர் ப.சதீஸ், தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .