2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஷெல் குண்டு கோதுகளை வாகனத்தில் கொண்டு சென்றவர்கள் கைது

Kogilavani   / 2014 மார்ச் 04 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராச

பழைய இரும்புப்பொருட்களுடன் ஷெல் குண்டுகளின் வெற்றுக்கோதுகளை பாரவூர்தியில் ஏற்றிச்சென்ற இருவரை விசேட புலனாய்வுப் பொலிஸார்  (04) கைதுசெய்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட புலனாய்வு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நல்லூர் பகுதியில் வைத்து இவர்களைக் கைதுசெய்ததுடன் பாரவூர்தியினையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதாக பொலிஸார் கூறினர்.

ஷெல் குண்டுகளின் வெற்றுக்கோதுகளானது பார ஊர்தியில், யாழ்.ஜந்து சந்தி பகுதியிலிருந்து மாதம்பை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நல்லூரி பகுதியில் வைத்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பாரவூர்தியில் இருந்த பொருட்களை யாழ்.பொதுநூலக அருகிலுள்ள வளாகத்தில் வைத்து சோதனை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .