2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பஸ் விபத்தில் சாரதி காயம்

Kogilavani   / 2014 மார்ச் 07 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத், வி.தபேந்திரன்

சாவகச்சேரியில் வெள்ளிக்கிழமை (7) இடம்பெற்ற பஸ் விபத்தில் சாரதி ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்காளை பகுதியிலிருந்து யாழ்பாணத்திற்கு சுற்றுலாவுக்காக மாணவர்களை ஏற்றி சென்ற    இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பஸ்ஸொன்று சாவகச்சேரியிலிருந்து யாழ். நோக்கி சென்றுகொண்டிருந்த கன்டர் ரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் கண்டர் ரக வாகனத்தை செலுத்தி சென்ற சாரதியே காயமடைந்ததாகவும் மாணவர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்ததுடன் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்  தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .