2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Kogilavani   / 2014 மார்ச் 10 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

அளவெட்டி பத்துப்பனையடியில் மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் கணவன் மனைவி இருவரும் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் திங்கட்கிழமை (10) தெரிவித்தனர்.

அளவெட்டி முருங்கையம்புலத்தினைச் சேர்ந்த க.பிரபாஸ் (34), பி.யதுதீபா (29) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர்.

தமது வியாபார நிலையத்தினை ஞாயிற்றுக்கிழமை (9)  இரவு பூட்டிவிட்டு துவிச்சக்கர வண்டியில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த கணவன் மனைவி இருவருமே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

அத்துடன், இவர்களை மோதிய மோட்டார் சைக்கிள் தப்பிச் சென்றுவிட்டதாகத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .