2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஊடகத்துறையினருக்கான செயலமர்வு

Kogilavani   / 2014 மார்ச் 13 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.மாவட்டச் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு வெள்ளிக்கிழமை (21) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் வியாழக்கிழமை (12) தெரிவித்தார்.

இச்செயலமர்வில் ஊடக நிறுவனங்களில் கடமையாற்றும் செய்தியாளர்கள், ஊடகத்துறை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, அனர்த்த முகாமைத்துவச் செயற்பாடுகள் தொடர்பான திறன் விருத்தி, காலநிலை மாற்றங்கள் தொடர்பான நடைமுறைகள், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக துறை சார்;ந்த நிபுணர்களினால் விளக்கமளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .