2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் விஜயம்

Kogilavani   / 2014 மார்ச் 13 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள நிரந்தர மற்றும் தற்காலிக வர்த்தக நிலையங்கள் தொடர்பாக ஆராய்ந்தறிந்து கொண்டார்.

இதன்போது, மத்திய பேருந்து நிலையத்தைச் சூழசுற்றுமதில் அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் அங்குள்ள நிரந்தர வர்த்தக நிலையங்களினது உரிமையாளர்களுடன் கலந்துரையாடிய அதேவேளை, அங்கு தற்காலிக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்களுடனும் கலந்துரையாடி அவர்கள் எதிர்நோக்கிவரும் இடர்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன், தற்காலிகமாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் வர்த்தகர்களுக்கு அப்பகுதியில் வர்த்தக நிலையங்களை அமைத்து கொடுப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

இதனிடையே வர்த்தக நிலையங்களின் உரிமங்கள், மாநகர சபையால் அறவிடப்படும் வாடகைப் பணத்தை வடபிராந்திய போக்குவரத்து சபைக்கான பங்கீடு மற்றும் யாழ்.மாநகர சபையின் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் துறைசார்ந்த அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது, யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, பிராந்திய பிரதான முகாமையாளர் அஸ்ஹர், மத்திய பேருந்து சாலை முகாமையாளர் குலபாலசெல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .