2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வாள்வெட்டில் இளைஞன் படுகாயம்

Kogilavani   / 2014 மார்ச் 14 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு பின்னால் வைத்து திருநெல்வேலியினைச் சேர்ந்த வி.பிரசாத் (19) என்ற இளைஞனை இளைஞர்கள் குழுவொன்று வாளால் வெட்டியதில் குறித்த இளைஞன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞனை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு அழைத்துச் சென்றே இவ்வாறு வாளினால் வெட்டியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த வாள்வெட்டுச் சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரவதாகப் பொலிஸார் மேலும் கூறினார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .