2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர் பிணையில் விடுதலை

Kogilavani   / 2014 மார்ச் 14 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ். ஆவரங்கால் மணற்தரப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட அதே இடத்தைச் சேர்ந்த நபரை 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் பஷPர் மொஹமட் வியாழக்கிழமை (13) அனுமதியளித்தார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

மேற்படி பகுதியில் குறித்த நபர் கடந்த சனிக்கிழமை (08) மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த வேளை, அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அச்சுவேலிப் பொலிஸார் குறித்த நபரை சோதனையிட்ட போது, அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் அகழ்ந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்ததுடன், மணல் அகழ்விற்கு பயன்படுத்திய உழவு இயந்திரத்தினையும் அச்சுவேலிப் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றிருந்தனர்.

தொடர்ந்து, குறித்த நபரை வியாழக்கிழமை (13) மல்லாகம் நீதவான் நீதிமனறத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .