2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நேரிய சிந்தனைகள் அரிதாக உள்ளன

Suganthini Ratnam   / 2014 மார்ச் 14 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

சமூகத்திலுள்ள அநேகமானவர்களிடம் நேரிய சிந்தனைகள் அரிதாகவே காணப்படுவதாக  யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

யாழ். பொதுமக்கள் தொடர்பு காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான ஆளுமை விருத்திச் செயலமர்வில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'தனிநபர் ஆளுமையானது தனிப்பட்ட விடயங்களில் மட்டுமல்லாது, பல்வேறு விடயங்களிலும் தங்கியுள்ளது. தற்போது நேர்மறையான சிந்தனைகளே  சமூகத்தில் அதிகமாக காணப்படுகின்றன.

நாங்கள் எதையும் செய்யக்கூடியவர்களென நினைத்து அவற்றைச்; செய்ய மறந்துவிடுகின்றனர். மேலும், ஏதாவது எதிர்மறையாகச் சொல்ல வேண்டுமென்பதிலேயே சிலர் ஆர்வமாக இருக்கின்றனர். எதற்கு எடுத்தாலும் நேர்மறையாக தங்களது நடத்தைகளை மாற்றிக்கொள்ளும் அங்கத்தவர்களும் இச்சமூகத்தில் இருக்கின்றனர். 

தவறு விடும்போது  தவறை  தெரிந்துகொள்வதுடன், தவறை உணர்ந்து அதற்கான காரணங்களை அறிந்து பின் சரியான முறையில் எம்மை திருத்திக்கொள்ள வேண்டும். எமது தவறை அடையாளங்கண்டு அது தொடர்பாக கவனம் செலுத்தும் தருணத்தில் எமது ஆளுமையை  வளர்க்க முடியும். தனி நபர் ஆளுமையை  வளர்ப்பதற்கு தனி நபர் என்ற அந்தஸ்துடன் செயற்பட வேண்டும்.

மேலும்,  குழு வேலைத்திட்டங்களில் பங்குகொள்பவர்களாக எம்மை மாற்ற வேண்டும். குழு வேலைகளில் எம்மை ஈடுபடுத்துவோமானால் மற்றவர்களின் அறிவு, அனுபவங்கள், செயற்பாடுகள் ஆகியவற்றை அறிந்து எம்மை வளர்க்கக்கூடியதாக இருக்கும்.

இவ்வாறான செயற்பாடுகளினால் ஏனையவர்களின் பல்வேறு திறமைகளையும் அனுபவங்களையும் பெறுவதன் மூலம் எமது ஆளுமையை வளர்க்கக் கூடியதாக இருக்கும். தனிப்பட்ட ஆளுமையை வளர்;ப்பதன் மூலம் சரியான சமூகத்திற்கான தலைமைத்துவ பண்பைப் கொண்டவர்களாக மாறுவோம்.

பாடசாலை பருவத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளும் சிந்தனைகளும் நிச்சயமாக எதிர்கால வாழ்வில் எத்தகைய பண்புகளை கொண்டுள்ளீர்கள் என்பதனை கொண்டு அவை அமைய இருக்கின்றன.

சமூகத்திற்கு ஆளுமை விருத்தியை பகிர்வதால் சமூகத்தில்; உயர்வும் வளர்ச்சியும் காணப்படும். அபிவிருத்தி திட்டங்கள், இளைஞர் கழகங்கள், விளையாட்டு கழகங்கள் ஆகியவற்றில் எமது திறமைகளை வளர்த்துக்கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இவையே எமது வாழ்நாள் படிநிலைகளில் முன்னேறக் கூடியதாக இருக்கும்.

இன்று பொறுப்புக்களை ஏற்க மறுக்கும் தன்மை அதிகமாக இருக்கின்றன.  பொறுப்புக்களை ஏற்கும் தன்மை ஆளுமையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் இருக்கின்றது.

நேரிய சிந்தனையில் முடியும் என்ற முயற்சி எமக்கு இருக்க வேண்டும். எம்மால் முடியாவிட்டாலும் கூட குறிக்கப்பட்ட விடயங்களை எடுத்துச் செய்வதனால், எமது ஆளுமையை விருத்தியடையச் செய்யலாம். எடுத்த எடுப்பில் முடியாது எனச் சிந்திப்பது எமது ஆளுமை விருத்தியை குறைக்கும் தன்மையை அதிகரிப்பதாக இருக்கும்.

சிந்தனைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் ஆளுமைச் சக்தியாக அமையும் என்பதை கருத்திற்கொண்டு சிறந்த ஆளுமைகளை வளர்க்க வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .