2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஐந்து அடி நீளமான முதலை பிடிக்கப்பட்டது

Kogilavani   / 2014 மார்ச் 18 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். அச்சுவேலி வடக்கு நாவற்காடு பகுதியிலுள்ள வீடொன்றில் திங்கட்கிழமை (17) புகுந்த சுமார் 5 அடி நீளமான முதலை அப்பகுதி மக்களால் மடக்கி பிடுக்கப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு அருகிலுள்ள வல்லைவெளி சதுப்புநிலத்தில் இருந்து குறித்த முதலை மேற்படி வீட்டிற்குள் வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த முதலையை வனஜீவராசி திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த 12 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை யாழ்.நாயன்மார்கட்டு கிராமத்திற்குள் புகுந்த சுமார் 5 அடி நீளமான முதலை அப்பகுதி இளைஞர்களால் பிடிக்கப்பட்டு வனவளப்பாதுகாப்பு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .