2025 ஜூன் 28, சனிக்கிழமை

காணி உரிமம் கோரி போராட்டம்: நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதேச செயலர் உறுதி

Kogilavani   / 2014 மார்ச் 21 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்

சாவகச்சேரி உதயசூரிய கிராமத்தில் தற்காலிகமாக அரச காணியில் வசிக்கும் 50 மேற்பட்ட குடும்பங்களுக்கு காணிகளின் உரிமங்கள் வழங்கப்படும் என்றும் இல்லையேல் வேறு இடங்களில் காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச செயலர் திருமதி அ.சாந்தசீலன் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்த அவர்களால் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. 

சாவகச்சேரி உதயசூரிய கிராமத்தில் தற்காலிகமாக அரச காணியில் வசிக்கும் 50 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் தாங்கள் குடியிருக்கும் காணிகளின் உரிமங்களை வழங்குமாறு கோரி சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக வெள்ளிக்கிழமை (21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் சுகாதாரத் தொழிலாளிகளாகக் கடமையாற்றி வருகின்ற தமக்கு அரச காணியினை பகிர்ந்தளிக்கும் பட்சத்தில் நகராட்சி மன்றத்தினால் தமக்கு வீடுகள் கிடைக்கும் என்றும், இதனால் தமக்கு காணி உரிமையினை வழங்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தபோதும், அவர்கள் செயற்படுத்தவில்லையென மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 'பிரதேச செயலரே! ஏழை மக்கள் எங்களையும் ஒரு தரம் பாருங்கள்', 'நாம் குடியிருக்கும் நிலம் எமக்கு வேண்டும்', 'அரச அதிகாரிகளே எமது குடியிருப்புக்கு ஒருதரம் வருகை தாருங்கள்', 'நாம் குடியிருப்பதற்கு நிலம் எமக்கு வேண்டும்', 'ஜனாதிபதி அவர்களே இது உங்களின் கவனத்திற்கு', போன்ற வாசகங்களைத் தாங்கிவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைச் சந்தித்த சாவகச்சேரி பிரதேச செயலர் திருமதி அ.சாத்தசீலன்,
இதுதொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து அவர்களின் அனுமதியுடன் உங்களுக்கு மேற்படி பிரதேசத்தில் காணி வழங்கப்படும். இல்லையேல் வேறு இடங்களில் உங்களுக்கு காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .