2025 ஜூன் 28, சனிக்கிழமை

சின்னத்தம்பி வித்தியாலயத்தில் புதிய விஞ்ஞான ஆய்வு கூடம் திறப்பு.

Super User   / 2014 மார்ச் 22 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


சிங்கப்பூர் நாட்டின் பௌத்த நட்புறவு நிலையத்தின் 2.5 மில்லியன் ரூபா நிதியுதவியில் அமைக்கப்பட்ட அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயத்தின் புதிய விஞ்ஞான ஆய்வு கூடக் கட்டிடத்தொகுதி வெள்ளிக்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் பி.சந்திரபாவு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிங்கப்பூர் நாட்டின் பௌத்த நட்புறவு நிலையத்தின் அதிகாரி வீரசன்டிபோன் கலந்துகொண்டு கட்டித்தொகுதியின் பெயர் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் பி.சந்திரபாவு, ஆசியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இப்பாடசாலையில் தரம் 1 தொடக்கம் க.பொ.த.சாதாரணம் வரை வகுப்புகள் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .