2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழ்.மாநகர முதல்வர் கட்சி பேதம் பார்ப்பதாக குற்றச்சாட்டு

Kogilavani   / 2014 மார்ச் 27 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.மாநகர சபையினால் சபைக்குட்பட்ட பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா கட்சி பேதம் பார்த்தே முன்னெடுத்து வருவதாக யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர் ஐ.சோதிலிங்கம் குற்றஞ்சாட்டினார்.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் வியாழக்கிழமை (27) யாழ்.மாநகர முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே சோதிலிங்கம் மேற்படி குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

 'உறுப்பினர்களின் வதிவிடப் பகுதியில் உள்ள பிரதேசங்களில் புனரமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டால், அதற்கு முதல்வர் கட்சி பேதம் பார்க்கின்றார்' என்று இதன்போது அவர் தெரிவித்தார்.

இதற்கு குறுக்கிட்ட மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா,

'யாழ். மாநகர சபையினால் சபைக்குட்பட்ட பிரதேசங்களில் 800 மில்லியன் ரூபா பெறுமதியான புனரமைப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், எமது கட்சிக்கு சேறு பூசும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம்' எனக் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .