2025 ஜூன் 28, சனிக்கிழமை

உடையார்கட்டில் ரி.ஐ.டி யினரால் ஒருவர் கைது

Kogilavani   / 2014 மார்ச் 28 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் வைத்து சின்னத்துரை ஸ்ரீகாந்தன் (35) என்ற இளைஞன் வியாழக்கிழமை (27) இரவு 11 மணியளவில் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால்  (ரி.ஐ.டி) கைது செய்யப்பட்டார்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியான இவர் புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்படடிருந்த நிலையில் மீண்டும் வியாழக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கைச் சேர்ந்தவர் இவர் உடையார்கட்டுப் பகுதியில் வசித்து வருகின்றார்.

உடையார்கட்டுப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெதுப்பகம் ஒன்றில் பணியாற்றிய விசேட தேவையுடைய ஒருவரும்  ரி.ஐ.டி யினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  ரி.ஐ.டி யினாரால் சந்தேகத்தின்பேரில்  யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .