2025 ஜூன் 28, சனிக்கிழமை

தாதிய உத்தியோகத்தர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

A.P.Mathan   / 2014 மார்ச் 31 , மு.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். போதனா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (31) பணிப் புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக யாழ். போதான வைத்தியசாலையின் தாதிய சங்க தலைவர் நல்லையா நற்குணராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) தெரிவித்தார்.

தாதிய உத்தியோகத்தர்களுக்கு மனநோயியல் மற்றும் மகப்பேற்று மருத்துவம் ஆகிய இரு பயிற்சிகள் சுகாதார அமைச்சினால் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் அதற்கான சுற்றுநிரூபத்தினை வெளியிடவிடாமல் அரச வைத்திய சங்கத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனைக் கண்டித்தே இன்று காலை 7 மணி முதல் நண்பகல் 1 மணிவரையும் இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நற்குணராஜா கூறினார்.

அத்துடன், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி, சுகயீன விடுப்புப் போராட்டத்தினையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் தாதிய சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .