2025 ஜூன் 28, சனிக்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

A.P.Mathan   / 2014 மார்ச் 31 , மு.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். கொட்டடி நமசிவாயம் வீதியில் வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று மின்கம்பத்துடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் தலையில் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொலிஸார் நேற்று (30) தெரிவித்தனர்.

நேற்று (30) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கொட்டடி முதலி வீதியினைச் சேர்ந்த பாலராஜா வினோதன் (26), ரவீந்திரன் றொசான் (21) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் கூறினார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .