2025 ஜூன் 28, சனிக்கிழமை

சமுர்த்தி அலுவலர் வீட்டின் மீது கல் வீச்சு

Kogilavani   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.உடுவில் பகுதியில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது புதன்கிழமை (09) இரவு இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கல்வீச்சில் உத்தியோகத்தரின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் இரண்டு உடைந்ததாக சுன்னாகம் பொலிஸார் வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தனர்.

உடுவில் பகுதியில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீட்டின் மீதே இவ்வாறு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறித்த அலுவலரால் வியாழக்கிழமை (10) சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .