2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஆலய பாட்டுக்குழுக்களில் யுவதிகளை இணைப்பதனை தவிர்க்குமாறு கோரிக்கை

Kogilavani   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா 


கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ள பாட்டுக் குழுக்களில் யுவதிகளை இணைப்பதை தவிர்ப்பதற்கு யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்திடம் வேண்டுகோள் விடுக்குமாறு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கே.எக்.டக்ளஸ் தேவானந்தாவிடம் பொதுமக்கள் வியாழக்கிழமை (17) கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக காணப்படும் கிணற்றிலிருந்து கடந்த திங்கட்கிழமை (14) யாழ்.குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (22) என்ற யுவதி சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த யுவதியின் மரணத்திற்கு யாழ். ஆயர் இல்லத்தில் மறைக்கல்வி போதிக்கும் இரு குருமார்கள் காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டு, யாழ். ஆயர் இல்லத்தின் முன்பாக புதன்கிழமை (16) யுவதியின் உறவினர்களினால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எந்தளவில் உண்மை என்பதனை பொதுமக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்துக்களை கோரினார்.

இதன்போது கருத்து தெரிவித்த பொதுமக்கள்,

எதிர்காலத்தில் தேவாலயங்களில் பெண்களை பாட்டுக் குழுவிற்கு இணைக்காது, குருமார்கள், கன்னியாஸ்திரிகளை இணைப்பதுடன், ஆண்கள் மற்றும் தாய்மார்களை ஆலய கடமைகளில் அமர்த்துவதற்கு யாழ்.ஆயரிடம் கலந்துரையாடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், குறித்த கிணற்றிற்குள் இதுவரையில் 7 இற்கும் மேற்பட்ட தற்கொலை சம்பவங்கள் இடம்பெற்றதுடன், கிணற்றினைச் சுற்றிக் கட்டப்பட்ட சுவரினால், சமூக சீர்கேடுகளும் இடம்பெறுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைப்பு தலைவரிடம் எடுத்துரைத்தனர்.

இ;வ்விரு கோரிக்கைகளையும் விரிவாக ஆராய்வதாகவும், ஆலயங்களில் உள்ள பாட்டுக் குழுக்களில் ஆண்கள் மற்றும் குருமார்கள், கன்னியாஸ்திரிகளை இணைப்பது தொடர்பாக யாழ். ஆயரிடம் கலந்துரையாடுவதுடன், குறித்த யுவதியின் மரணத்திற்கான  நியாயத்தினை ஆராய்வதாகவும் அமைச்சர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .