2025 ஜூன் 28, சனிக்கிழமை

வாகன விபத்து: இருவர் காயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

கொடிகாமம் இராமவில் பகுதியில் இன்று(17) பகல் இரண்டு வான்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

தர்காநகர் பிரதான வீதியினைச் சேர்ந்த நத்தர் அல் பாத்திமா(3 1/2) மற்றும் வான் சாரதியான கொழும்பு கிரிபத்கொடவினைச் சேர்ந்த ரவி சுரேந்திரசிங்க(31) என்ற இருவருமே காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்று திரும்பிச் சென்ற வானும் கொடிகாமம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த வான் ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதியுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .