2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பாரவூர்திச் சங்க அங்கத்தவர் குடும்பத்துக்கு உதவித்தொகை

Suganthini Ratnam   / 2014 மே 19 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா 

யாழ். மாவட்ட பாரவூர்திச் சங்கத்தின் அங்கத்தவரான உடுவிலைச் சேர்ந்த கந்தன் சுப்பிரமணியம் என்பவர் மரணமடைந்த நிலையில், அவரது குடும்பத்துக்கு 25,000 ரூபா உதவித்தொகையை அவரது மனைவியிடம் யாழ். மாவட்ட பாரவூர்திச் சங்கம்  திங்கட்கிழமை (19) வழங்கியது.

தமது அங்கத்தவர் ஒருவரின் இழப்புக்கு முதல் தடவையாக உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் தமது அங்கத்தவர்கள் பாதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் இத்தகைய உதவிகளை வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பாரவூர்திச் சங்கத் தலைவர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட பாரவூர்திச்; சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு 700 வரையான பாரவூர்திகள் உள்ளன.  தொழில் வாய்ப்புக்கள் இல்லையெனவும் இதனால், பாரவூர்தி உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார்.

மேலும்,  யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் மாகாணசபையினரிடம் தங்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் பெற்றுத் தருமாறு கோரியுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X