2025 ஜூன் 30, திங்கட்கிழமை

புகைப்படம் எடுத்த மூவர் கைது

Kogilavani   / 2014 மே 19 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, இரணைமடு இராணுவ முகாமினை கைத்தொலைபேசியில் புகைப்படமெடுத்த மூவரை இராணுவத்தினர் திங்கட்கிழமை (19) கைதுசெய்து தம்மிடம் ஒப்படைத்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தினைச் யுவதி உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரணைமடுப் பகுதியினைச் சுற்றிப் பார்க்க வந்த மேற்படி மூவரும், கனகாம்பிகைக்குளம் பகுதியில் நின்று உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்த இரணைமடு இராணுவ முகாமினை புகைப்படமெடுத்தனர் என்ற குற்றச்சாட்டில்; கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மூவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X