2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கடமைக்கு சென்ற இராணுவ வீரர் சடலமாக மீட்பு

Kanagaraj   / 2014 மே 19 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், கி.பகவான் 

யாழ். எழுதுமட்டுவாள் பகுதியிலிருந்து இராணுவ வீரர் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை(19) மீட்கப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட இராணுவ வீரரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் முகாமாலை இராணுவ முகாமினைச் சேர்ந்த கொடஹே என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று(18) இரவு முகாமாலை இராணுவ முகாமிலிருந்து எழுதுமட்டுவாளிற்கு கடமைக்கு வந்த இவர் இன்று(19) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .