2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சமூக வலைப்பின்னலை ஏற்படுத்தல்

Kogilavani   / 2014 மே 19 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


வெளிக்கள உத்தியோகத்தர்கள் மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய பயன்களும், சமூக நிறுவனங்களினை இணைப்பதன் மூலம் பொதுமக்கள் பெறும் பயன்கள் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் செயற்றிட்டம் வேள்ட் விசன் நிறுவனத்தினால் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வேள்ட் விசன் நிறுவனத்தின் திட்டமிடல் அதிகாரி எஸ்.அன்சலிற்றோ தலைமையில் நடைபெற்று வரும் இந்த செயற்றிட்டம் கரைச்சிப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒவ்வொரு கிராமங்கள் தோறும் முன்னெடுக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை (13) அம்பாள் நகரிலும், வெள்ளிக்கிழமை (16) கோணாவில் பகுதியிலும் இச்செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து திங்கட்கிழமை (19) செல்வா நகரில் இந்தச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன், செவ்வாய்க்கிழமை (20) கிருஷ்ணபுரத்திலும் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

வெளிக்கள் உத்தியோகத்தர்களான சமூகசேவைகள் உத்தியோகத்தர்கள், கிராமஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், தேசிய சிறுவர் வேவைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், உளவள உத்தியோகத்தர்கள், பொருளாதா அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியவர்கள் மூலம் எவ்வாறான நலன்களை பொதுமக்கள் பெறமுடியும் என்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்படுகின்றன.

அத்துடன், கிராமங்களிலுள்ள மாதர் அபிவிருத்திச் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், சனசமூக நிலையம் மற்றும் ஆலய பரிபாலன சபைகளை ஒன்றிணைத்து ஏற்படுத்தக்கூடிய பயன்தரு விடயங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X