2025 ஜூன் 30, திங்கட்கிழமை

போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்குதல்

Suganthini Ratnam   / 2014 மே 20 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


அச்சுவேலி பொலிஸாரும் ஆவரங்கால் சமுர்த்தி அபிவிருத்தி வங்கியும் இணைந்து 'போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குதல்' என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கொன்றை  ஆவரங்கால் சமுர்த்தி வங்கிக் கிளையில்  திங்கட்கிழமை (19) நடத்தியது.

போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு செலவிடும் பணத்தை சேமிப்பாக மாற்றி உங்கள் எதிர்காலத்தை  வளப்படுத்துங்கள் என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

இக்கருத்தரங்கில் சமுர்த்திப் பயனாளிகள், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின்  சிவில் சமூகத் தொடர்பாளர் முதியன்சே, ஆவரங்கால் சமுர்த்திச் சங்க முகாமையாளர் பொ.சுரேஸ்குமார் உள்ளிட்ட பலர்; கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X