2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற மூவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 21 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான் 

யாழ். நாவற்குழி, நுணாவில், கைதடி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 03 பேரை  கைதுசெய்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், மின் இணைப்பு வயர்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

மேற்படி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (20) சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்ட திடீர்ச் சோதனையின்போது கைதுசெய்யப்பட்ட இம்மூவரும், தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X