2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அங்குரார்ப்பண முப்பெரும் விழா

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சி. அன்சார், எம்.வை.அமீர்


கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் சம்மாந்துறை ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலை மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளின் அபிவிருத்திப் பணிகளின் அங்குரார்ப்பண முப்பெரும் விழா இன்று சனிக்கிழமை(31) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம். மன்சுர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலைக்கு வெளிநோயாளர் பிரிவுக்கான கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் விஷேட குழந்தைப்பராமரிப்புப் பிரிவை ஆரம்பித்து வைத்தல், வைத்திய அதிகாரிகளின் விடுதிகளை திறந்து வைத்தல், புதிய எக்ஸ் - ரே இயந்திரம் கையளித்தல், சுகவாழ்வு நிலையம் திறந்து வைத்தல் போன்றவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.

இந்நிகழ்வில், நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்திய திணைக்களத்தின் ஆணையாளர் வைத்தியர் திருமதி எஸ்.சிறீதர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல். அலாவுதீன், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.சி.எஸ்.தலகல, சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.நஸீர், வைத்தியர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X