2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வடக்கில் தமிழ் பெண் பொலிஸாருக்கான நேர்முகத் தேர்வு

Menaka Mookandi   / 2014 ஜூன் 01 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு தமிழ் பெண் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் தமிழ் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (01) முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாணத்தில் 100 பெண் உப பொலிஸ் பரிசோதகர்களுக்கும், 400 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் இணைப்பது தொடர்பாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு அமைவாகவே இந்த நேர்முகத் தேர்வு இடம்பெறுவதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் ஜயசிங்க தெரிவித்தார்.

நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்படுபவர்கள் காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பயிற்சி நிலையங்களில் பயிற்சியளிக்கப்பட்டு பணியில் இணைத்துக் கொள்ளப்படுவதுடன், அவர்கள் வடமாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களிலே பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X