2025 ஜூன் 30, திங்கட்கிழமை

படிப்பகம் திறப்பு விழா

Kogilavani   / 2014 ஜூன் 03 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.குகன்


இணுவில் பொது நூலக சனசமூக நிலையத்தில் திருமதி அன்னலட்சுமி சின்னராசா ஞாபகார்த்தமாக 10 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட 'படிப்பகம்' திங்கட்கிழமை(02) திறந்து வைக்கப்பட்டது.

பொது நூலகத்தலைவர் ச.சிவசங்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கட்டிடத்தினை ஓய்வு பெற்ற ஆசிரியர் நா.சின்னராசா திறந்து வைத்ததுடன், பெயர்ப் பலகையினை பேராசிரியர் எஸ்.சத்தியசீலன் திரை நீக்கம் செய்துவைத்தார்.

தொடர்ந்து படிப்பகக் கட்டடத் திறப்பு விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. நூலினை அண்ணா தொழிலக அதிபர் க.பொ.நடராசா வெளியிட்டு வைக்க, இணுவில் பொதுநூலக மூதவை உறுப்பினர் து.சிவராசா முதற்பிரதியினைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ்.சத்தியசீலன், வடமாகாண மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X