2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இரணைமடு வாய்க்கால் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 05 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி இரணைமடு வாய்க்கால்களின் கீழான அபிவிருத்தி திட்டங்கள் 'இபாட்' திட்டத்தின் கீழ் கடந்தாண்டு (2013) 300 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன் இன்று வியாழக்கிழமை (05) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி இரணைமடுக் குள வாய்க்கால்களின் கீழான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கடந்த ஆண்டு முதல் இபாட் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு பிரதான வாய்க்கால்கள், கழிவு வாய்க்கால்கள் ஆகியவற்றின் உருத்திரபுரம் வரையான புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாண்டு ஏ - 35 வீதியின் கீழுள்ள ஊரியான், முரசுமோட்டை ஆகிய பகுதிகளிலும் பூநகரி வீதியின் கீழுள்ள பகுதிகளான பெரியபரந்தன், பரந்தன் ஆகிய பகுதிகளிலும் வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என அவர் மேலும் தெரிவித்;தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X