2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு நிலையம் திறப்பு

Kogilavani   / 2014 ஜூன் 06 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.ஜெகநாதன்


யாழ்.தொல்புரத்தில் 8 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைப்பட்ட ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு நிலையத்தினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இணைந்து வியாழக்கிழமை (05) திறந்து வைத்தார்கள்.

ஏற்கனவே பாழடைந்த கட்டிடத்தில் வசதிகள் குறைந்த நிலையில் இயங்கி வந்த மேற்படி ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு நிலையத்திற்கு இங்கிலாந்தில் பொறியியலாளராகவிருக்கும் இராஜபட்சம் ஸ்ரீரங்கபட்சம் என்பவர் புதிய கட்டிடத்தினை தனது செலவில் அமைத்து சுகாதாரத் திணைக்களத்திற்கு வழங்கியிருந்தார்.

இக் கட்டிடத் திறப்பு விழாவில், ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் சுழிபுரம் பிரதேச சபையில் தவிசாளர் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X