2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தென்மராட்சியில் மாடுகளுக்கு கால்வாய் நோய்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 06 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான் 

யாழ். தென்மராட்சி, மிருசுவில் வடக்குப் பகுதியில் 03 பட்டிகளிலுள்ள மாடுகளுக்கு கால்வாய் நோய் தொற்றியுள்ளதாக தென்மராட்சி பிரதேச கால்நடை வைத்தியதிகாரி வைத்தியர் ஜி.இரகுநாதன்  தெரிவித்தார்.

இதனால், அங்கு இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுதலும் பால் விற்பனையும் இன்று வெள்ளிக்கிழமையிலிருந்து மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளது.  மறு அறிவித்தல் வரை மாட்டிறைச்சிக் கடைகளும் மூடப்பட்டிருக்கும் எனவும் அவர் கூறினார்.

கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் வரணி வரையான இடங்களிலும் எழுதுமட்டுவாள் ஏ – 9 வடக்கு, மிருசுவில்  வடக்கு பகுதியில் குடமியன், நாவற்காடு, எருவன், எழுதுமட்டுவாள் படித்த மகளிர் குடியேற்றத்திட்டம், வரணி உள்ளிட்ட இடங்களில் பட்டிகளிலுள்ள  மாடுகளுக்கே இந்த  நோய் தொற்றியுள்ளது.

இந்த இடங்களிருந்து மாடுகள் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதும் வெளியிடங்களிலிருந்து மாடுகள் மேய்ச்சலுக்காக இந்த இடங்களுக்கு கொண்டு வருவதும் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொற்று ஏற்பட்டுள்ள பிரதேசத்தைச்; சுற்றியுள்ள 15 கிலோமீற்றர் பகுதியிலுள்ள மாடுகளுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி ஏற்றப்பட்டு, தொடர்ந்து தொற்று ஏற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாகவும்  அவர் கூறினார். இதன் மூலம் கால்வாய் நோய்  பரவுவதை தடுக்கமுடியும். தடுப்பூசிகள் இன்றையதினம்  தமக்கு கிடைக்கும்  பட்சத்தில்  தடுப்பூசிகள் போடப்படும் எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X