2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பல திருட்டுக்களுடன் தொடர்புடையவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 10 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும்  நாவற்குழி 100 வீட்டுத்திட்டப் பகுதியைச் சேர்ந்த ஒருவரை  கைதுசெய்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றில் திங்கட்கிழமை (09) மாலை இவர்  தங்கநகைகளை திருடியபோது,  பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில், சந்தேக நபரிடம்  விசாரணை மேற்கொண்டதில் இவர்   பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று  தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X