2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பார்த்தீனியக் கொள்வனவு ஆரம்பம்

Kogilavani   / 2014 ஜூன் 11 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன் 


வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெறுகின்ற பார்த்தீனியக் கொள்வனவு நடவடிக்கைகள் புதன்கிழமை (11) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ பார்த்தீனியம் 10 ரூபா என்ற ரீதியில், யாழ்.மாவட்டத்தில் பார்த்தீனியம் அழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்த கொள்வனவுத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கொள்வனவு நடவடிக்கையில் புத்தூர், சிறுப்பிட்டி மேற்கு, அச்செழு, அச்சுவேலி மேற்கு வசாவிளான், ஏழாலை, வட்டுக்கோட்டை, கைதடி கிழக்கு, கோண்டாவில், மாதகல், உடுப்பிட்டி, வல்லை நாச்சந்தி ஆகிய இடங்களில் இருக்கும் பார்த்தீனியங்களை பிடிங்கி உரப்பைகளில் இட்டு அந்தந்த இடங்களில் அமைக்கப்படும் கொள்வனவு நிலையங்களில் பொதுமக்கள் ஒப்படைத்து வருகின்றனர்.

அத்துடன், பார்த்தீனியம் செடிகள் கொண்டு வரப்படும் உரப்பைகளுக்குப் பதிலாக மாற்று உரைப்பைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X